Sasrin Jasath

Sasrin Jasath Farm

தினமும் 7000 அடிகள் நடந்தால் அகால மரணத்தைத் தவிர்க்கலாம் - அதிரடி ஆய்வுத் தகவல்!உங்கள் காலணிகளே நீங்கள் வைத்திருக்கும் ம...
09/04/2026

தினமும் 7000 அடிகள் நடந்தால் அகால மரணத்தைத் தவிர்க்கலாம் - அதிரடி ஆய்வுத் தகவல்!

உங்கள் காலணிகளே நீங்கள் வைத்திருக்கும் மிகவும் சக்திவாய்ந்த மருந்தாக இருக்கலாம். சிட்னி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மெலடி டிங் (Melody Ding) தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வியக்கத்தக்க ஆய்வு.

நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் எளிய வழி!
பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தப்பட்ட 57 ஆய்வுகளை ஆய்வு செய்ததில், ஒரு நாளைக்கு குறைந்தது 7,000 அடிகள் நடக்கும் பெரியவர்களுக்கு, குறைவாக நடப்பவர்களை விட மரணமடையும் அபாயம் 50-70% வரை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நடைப்பயிற்சியால் கிடைக்கும் மற்ற நன்மைகள்:

இதய நோய்க்கான வாய்ப்பு 25% குறைகிறது.

டிமென்ஷியா ஏற்படும் அபாயம் 38% வரை குறைகிறது.

மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு 22% குறைகிறது.

10,000 அடிகள் தேவையா?

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 7,000 அடிகளுக்கு மேல் நடப்பதால் கிடைக்கும் கூடுதல் பலன்கள் மிகக் குறைவே. நாம் பொதுவாகக் கேள்விப்படும் "தினமும் 10,000 அடிகள்" என்ற இலக்கு, பலருக்கு ஒரு தடையாகவே (சோர்வை ஏற்படுத்தி) அமைகிறது.

உண்மையில், பெரும்பாலான ஆண்களுக்கு ஆடம்பரமான உடற்பயிற்சி கூடங்கள் (Gym) தேவையில்லை; உடல் இயக்கம் மட்டுமே போதுமானது. எனவே, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த இன்றே நடக்கத் தொடங்குங்கள்!

தஹஜ்ஜுத் நேரத்தில் வெறும் தொழுகையோடு மட்டும் நின்றுவிடாமல் கீழ்க்கண்ட அமல்களைச் செய்வது நன்மைகளை வாரி வழங்கும்:இஸ்திக்பா...
09/04/2026

தஹஜ்ஜுத் நேரத்தில் வெறும் தொழுகையோடு மட்டும் நின்றுவிடாமல் கீழ்க்கண்ட அமல்களைச் செய்வது நன்மைகளை வாரி வழங்கும்:

இஸ்திக்பார் (பாவமன்னிப்பு தேடுதல்): அதிகாலையில் பாவமன்னிப்பு தேடுபவர்களை அல்லாஹ் குர்ஆனில் புகழ்கிறான். "அஸ்தக்ஃபிருல்லாஹ்" என்று மனமுருகி கேளுங்கள்.

நீண்ட ஸஜ்தா: இறைவனிடம் மிக நெருக்கமாக இருக்கும் நிலை ஸஜ்தா. உங்கள் குறைகளை, தேவைகளை அந்த நிலையில் அல்லாஹ்விடம் முறையிடுங்கள்.

குர்ஆன் ஓதுதல்: மனனம் செய்த சிறிய சூராவாக இருந்தாலும் சரி, நிதானமாக அதன் பொருளை உணர்ந்து ஓதுங்கள்.

திக்ருகள்: சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, லா இலாஹ இல்லல்லாஹ் போன்ற திக்ருகளைச் செய்யலாம்.

ஸலவாத்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வது துஆக்கள் கபூலாவதற்கு ஒரு திறவுகோலாகும்.

நினைவில் கொள்க:
உலகமே உங்களைக் கைவிட்டாலும், அல்லாஹ் உங்களுக்காகக் காத்திருக்கிறான். உங்களின் கண்ணீருக்கும், தேடலுக்கும் தஹஜ்ஜுத் நேரத்தில் விடை கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்!

*ஸுபஹ் தொழுகை இவ்வளவு சிறப்பானதா???*ஸுபஹ் தொழுகைக்காக எழும்பாது தூங்குகின்றவன் தான் சற்று அதிகமாக தனது உடலுக்கு ஓய்வு பெ...
09/04/2026

*ஸுபஹ் தொழுகை இவ்வளவு சிறப்பானதா???*

ஸுபஹ் தொழுகைக்காக எழும்பாது தூங்குகின்றவன் தான் சற்று அதிகமாக தனது உடலுக்கு ஓய்வு பெற்றுக் கொண்டதாக நினைக்கிறான்

*ஆனால் மறைவானவற்றை அறிந்த ஏக இறைவனின் முன்னால் சில நிமிடங்கள் நிற்பதால் கிடைக்கும் உண்மையான மனநிறைவின் சுகத்தை இந்த அப்பாவி மனிதன் அறியமாட்டான்.*

நீ நினைக்கின்ற நேரத்தில் தூங்குகிறாய், நினைக்கின்ற நேரத்தில் எழும்புகிறாய் ஆனால் தொழுகை பற்றி எந்தக் கவலையும் கொள்வதில்லை என்றால் நிச்சயம் நீ கவலைக்கிடமான நிலையில் இருக்கிறாய்.

இப்னுல் கையிம் (ரஹ்) குறிப்பிடுகிறார். *அல்லாஹ்வை விட மிகவும் கருணையாளன் யாரும் இல்லை*

*அல்லாஹ்வுக்கு ஸுஜுத் செய்யும் ஒருவன் அவனை சூழ்ந்து கொள்ளும் அருளை அறிவான் என்றால் அவன் தன் தலையை ஸுஜுதிலிருந்து உயர்த்தவே மாட்டான்.*

பஜ்ருடைய மக்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்டவர்கள், அவர்களது முகங்கள் பிரகாசமாக இருக்கும், அவர்களது நெற்றிகள் வெளிச்சமாக இருக்கும், அவர்களது நேரங்களில் பரகத் இருக்கும்.

நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால் அல்லாஹ்வைப் புகழ்ந்து கொள்ளுங்கள். அவர்களில் ஒருவராக இல்லை என்றால் அவ்வாறிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

*பஜ்ர்*நேரம் எவ்வளவு அருமையானது..

# # # அந்த நேரத்தின் கடமையான தொழுகை உங்களை அல்லாஹ்வின் பாதுகாப்பில் வாழவைக்கும்.*

# # # அந்த நேரத்தின் சுன்னத் உலகம் மற்றும் அதில் இருக்கும் அனைத்தையும் விட சிறந்ததாகும்

# # #அந்த நேரத்தில் ஒதப்படும் வேண்டும் அல்குர்ஆன் சாட்சியாக இருக்கும்

*நிச்சயமாக பஜ்ருடைய நேரத்தில் ஒதப்படும் குர்ஆன் சாட்சியாக வரும்*(அல்குர்ஆன்)

சகோதரனே!
யார் எதில் வாழ்கிறாரோ அதில் மரணிப்பார்.. யார் எதில் மரணிக்கிறாரோ அதில் எழுப்பப்படுவார்...

இது உங்கள் இதயத்தை தட்டினால் அடுத்தவர்களுடனும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன, எயார்பஸ் கொள்வனவு ஊழல் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்  கைது செய...
12/03/2026

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன, எயார்பஸ் கொள்வனவு ஊழல் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.

12/03/2026
இன்று கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு திடீர் விஜயம் செய்த அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்ச...
12/03/2026

இன்று கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு திடீர் விஜயம் செய்த அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ அவர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்

Address

Kalmunai
32300

Telephone

+94773268476

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sasrin Jasath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sasrin Jasath:

Share

Category