Sirkali TV

Sirkali TV சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை..

நஞ்சில்லா உலகம் படைத்தருள்வாய் இறைவா..
(10)

விவசாயிகளுக்கும்,பொதுமக்களுக்கும்,வியாபாரிகளுக்கும் உதவிடும் வகையில் தமிழர் மரபு வழி விவசாயம் விடீயோக்களை தொகுத்து வழங்குகிறது சீர்காழி டிவி.

மேலும் எங்களை ஊக்கபடுத்த YouTube பில் subscribe செய்யுங்கள்..

நன்றி

17/06/2026

முதல் முறையாக பாரம்பரிய அரிசி வாங்கப் போறீங்களா? வாங்கும் முன் இந்த வீடியோவை கண்டிப்பாக பாருங்கள்!

இந்த வீடியோவில் இந்தியாவின் பாரம்பரிய அரிசி வகைகள் பற்றிய அடிப்படை அறிமுகம் கொடுத்துள்ளார் காரைக்கால் பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி மற்றும் பாரம்பரிய நெல் பாதுகாவலர் திரு.பாஸ்கர் அவர்கள்

எல்லா பாரம்பரிய அரிசியும் ஒரே மாதிரி இல்லை! பாரம்பரிய அரிசி வகைகளை எப்படி தேர்வு செய்வது? முதல் முறையாக வாங்குபவர்களுக்கு முழு வழிகாட்டி

#பாரம்பரியஅரிசி

16/06/2026

ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லிகளோ பயன்படுத்தபடாமல் இயற்கையாக விளைந்த கரும்பு கொண்டு சர்க்கரை,வெல்லம்

இயற்கையாக விளைந்த கரும்பு ஆரம்பம் முதல் இறுதி வரை ரசாயன உரமோ,பூச்சிக்கொல்லிகளோ பயன்படுத்தப்படவில்லை.

இயற்கை பண்ணை மற்றும் இயற்கை விவசாயியிடமிருந்து நேரடியாக உங்கள் இல்லம் தேடி .100% தூய்மையானது

இயற்கை சர்க்கரை கிலோ ரூ.140
இயற்கை வெல்லம் கிலோ ரூ.150

தமிழ்நாடு முழுவதும் கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்

சுரேஷ்குமார் கொடிசுந்தரம்
இயற்கை விவசாயி
தமிழ்நாடு
9449617689

15/06/2026

குழந்தைகளுக்கான Easy Paper Box Craft 🎨 பழைய காகிதத்தில் சூப்பரான பெட்டி செய்யலாம் குழந்தைகளே! 📦😲

சென்னையில் உள்ள மாம்பழ பிரியர்களே இயற்கை முறையில் விளைந்த, ரசாயனம் கலக்காத மாம்பழங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவை அ...
14/06/2026

சென்னையில் உள்ள மாம்பழ பிரியர்களே இயற்கை முறையில் விளைந்த, ரசாயனம் கலக்காத மாம்பழங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவை அனைத்தும் மரத்தில் பழுத்தவை. செயற்கை மருந்துகள் எதுவும் இவற்றில் பயன்படுத்தப்படுவதில்லை.

ORGANIC FARMERS MARKET
Chennai
044-42611112
6380169943

ஒருநாள் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் வீட்டு சுப நிகழ்ச்சி ஒன்றிக்கு 100 நபர்களுக்கு பாரம்பரிய உணவு...
13/06/2026

ஒருநாள் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் வீட்டு சுப நிகழ்ச்சி ஒன்றிக்கு 100 நபர்களுக்கு பாரம்பரிய உணவுகளை தர விரும்பினார் அப்பொழுது தங்களுக்கு தெரிந்த பாரம்பரிய உணவுகள் தயாரிக்கும் நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்தால் இனி வரும் சுப நிகழ்ச்சிகளுக்கு அவரை பயன்படுத்திக் கொள்வேன் என்றார்..

ஆம் அதுவும் சரி தான் நாமும் தொடர்ந்து பாரம்பரிய அரிசிகளை பற்றி பதிவேற்றம் செய்து வருகிறோம். நண்பர்களும் பலர் தொடர்ந்து அவர்கள் இல்ல பயன்பாட்டிற்கு வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள் ஆனால் பெரும் கூட்டம் கூடும் நிகழ்ச்சி என்றால் அவர்கள் சமையல் கலைஞர்களை நாடும் பொழுது அவர்கள் பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களை பயன்படுத்தி உணவு செய்ய தயங்குகிறார்கள்..

சரி இதற்கு தீர்வாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னோடி இயற்கை விவசாயி திரு.அன்பு செல்வன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு அவரே செய்திருந்தார் பாரம்பரிய அரிசிகளை உற்பத்தி செய்வதோடு நிறுத்தி விடாமல் இன்றைய காலகட்டத்தில் அவற்றை அடுத்த கட்டமாக பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் பாரம்பரிய அரிசி கொண்டு உணவு தயாரிப்பது என்பது மேலும் சிறப்பு..

இயற்கை விவசாயத்தில் விளைந்த கருப்பு கவுனி அரிசி கொண்டு கருப்பு கவுனி சர்க்கரை பொங்கல் மற்றும் தங்க சம்பா அரிசி கொண்டு சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் மேலும் அவர் வயலில் விளைந்த கருப்பு முருங்கை கொண்டு கூட்டு என அனைத்துமே மிக சிறப்பாக இருந்தது வந்திருந்த மக்கள் அனைவரும் இரண்டுக்கு மூன்று முறை வாங்கி சுவைத்து மகிழ்ந்தனர்..

எனவே இனிவரும் காலங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் அந்த பகுதியில் பாரம்பரிய அரிசி உணவு சமைத்து தரும் நண்பர்களே அடையாளப்படுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளேன் தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது இருந்தால் கீழே கமெண்டில் பதிவு செய்யுங்கள்..

தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் நண்பர்கள் அன்புச்செல்வனை அவர்களை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

நன்றி
அன்புசெல்வன்
9042504453
தஞ்சாவூர்

Experience the Art of HandmadeExperience the beauty of handcrafted textile traditions through live demonstrations, inter...
13/06/2026

Experience the Art of Handmade

Experience the beauty of handcrafted textile traditions through live demonstrations, interactive workshops, and meaningful conversations. Join us at Yaseva to learn, create, connect, and celebrate sustainable living.

🌿 Workshops
🌿 Demos
🌿 Designers' Meet
🌿 Storytelling

📍 Spaces, Elliot's Beach Road, Besant Nagar, Chennai

🗓️ June 13 & 14

⏰ 10AM - 7 PM

Experience Tula India WORKSHOP

Rooted in Tradition. Woven for Tomorrow.

HAND SPINNING
NATURAL DYEING
TAPESTRY WEAVING
BLOCK PRINTING
ECO PRINTING
BRUSH LETTERING
CROCHET
MENDING
BIO ENZYME
STORYTELLING -PARUTHIYIN KATHAI

Create. Learn. Connect. Celebrate Khadi. Celebrate Handmade.

www.tula.org.in
8056163560/9840731318





இயற்கை யுடனும், இயற்கை வளங்களுடனும் இணைந்து உருவான காவேரி ஆற்றை பாதுகாக்க வேண்டும்!தஞ்சையில் நடைபெற்ற  சுற்றுச்சூழல் கரு...
13/06/2026

இயற்கை யுடனும்,
இயற்கை வளங்களுடனும் இணைந்து உருவான காவேரி ஆற்றை பாதுகாக்க வேண்டும்!

தஞ்சையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் கருத்தரங்கத்தில் கோரிக்கை காவேரி வடிநில பாசன கட்டமைப்பு மேலாண்மை குழு சார்பில் நேற்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் பெசன்ட் அரகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்விற்கு நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் சி. மகேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நமது காவேரி வடிநில மானது இயற்கை தந்த பொக்கிஷம் ஆகும். இயற்கையோடு இணைந்த பாசன கட்டமைப்பில் 27 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறுகிறது. பெரியதும் சிறியதுமாக1667 வாய்க்கால்கள் சமதள வடிவ நிலத்தில் உள்ளது. காவேரி நதிநீர் 11 மாவட்டங்களில் வேளாண்மைக்கு ஆதாரமாகவும், 30க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிற நதியாக விளங்குகிறது. இதை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என்று சுற்றுச்சூழல் கருத்தரங்கத்தில் நினைவு கூறப்பட்டது.

இந்த நிகழ்வில் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் ஒருங்கிணைப்பாளர் செந்தூர்பாரி, சுவாமிமலை சுந்தர விமலநாதன் சூழல் ஆய்வாளர் நக்கீரன், டெல்டா சத்யநாராயணன், தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் பொறியாளர் கோ.திருநாவுக் கரசு உள்ளிட்ட பலர் உரையாற்றி னார்கள். கூட்டத்தில் அதிக வெப்பத்தினால் விவசாயிகளும் குழந்தைகளும் பாதிக்கப்படு கிறார்கள்.

காலநிலை மாற்றத்தில் விவசாய விளைச்சல் குறைகிறது, அதிகப்படியான நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல் ஏற்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்ற ரசாயன உரங்களை பெருமளவில் பயன்படுத்துவது குறைக்க வேண்டும், அதற்கு மாற்றாக உயிர் உரங்களை அரசு ஊக்குவிக்க வேண்டும் அதேபோல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்ற நெகிழி பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும் அதற்கு பதிலாக காகிதப்பை, மஞ்சள் துணிப் பைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் தற்போது எல்டினோ வெப்ப அலை தாக்கம் அல்லது அதிகப்படியான வெயில் காரணமாக மக்கள் மிகவும் துன்பப்படுகின்றனர் வெப்ப அலை தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக இயற்றப்பட்டது கூட்டத்தில் நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் நாராயணன் தவச்செல்வன் கிருஷ்ணன் யாழினி அருணாச்சலம் துரை.மதிவாணன், பூவுலகின் நண்பர்கள் குழு நிர்வாகி மேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியினை அன்பு மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் ஒருங்கிணைத் தனர்.

 #அல்லிகுளம் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை கல்லூரி முன்பு உள்ள அழகான அல்லி குளம்..
12/06/2026

#அல்லிகுளம்

தஞ்சாவூர் பெரியார் மணியம்மை கல்லூரி முன்பு உள்ள அழகான அல்லி குளம்..

12/06/2026



விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி குறித்து முதலமைச்சர் விஜய் அறிவிப்பார் - அமைச்சர் வினோத்

காவேரி வடிநில பாசன கட்டமைப்பு மேலாண்மை குழு நடத்தும்காவேரி கலந்தாய்வு கருத்தரங்கம் 2026நாள்: 12-06-2026 வெள்ளிக்கிழமை இட...
12/06/2026

காவேரி வடிநில பாசன கட்டமைப்பு மேலாண்மை குழு நடத்தும்

காவேரி கலந்தாய்வு கருத்தரங்கம் 2026

நாள்: 12-06-2026 வெள்ளிக்கிழமை

இடம்: பெசன்ட் லாட்ஜ்,பழைய பேருந்து நிலையம் எதிரில்,தஞ்சாவூர்

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

சிறப்பு விருத்தினார்கள்

தோழர் சி மகேந்திரன்

பேராசிரியர் பழனித்துரை

செந்தூர் பாரி,எஸ்னோரா இன்டர்நேஷனல்

ஆர்.விமல்நாதன்,சுவாமிமலை

நக்கீரன்,சூழலியலாளர்

டெல்டா சத்திய நாராயணன்

கார்த்திக் குணசேகரன்,அறம் தினை,சென்னை

சுரேஷ் குமார்,CAAAP,சிதம்பரம்

இன்று வரை புழக்கத்தில் உள்ள உலகின் தொன்மையான நீர் பாசன கட்டமைப்புகளில் முதன்மையானதும் சிறப்பு வாய்ந்ததும் நமது காவிரி வடிநிலத்தின் பாசன கட்டமைப்புகள் ஆகும்.இது மனிதன் வேளாண்மை சமூகமாக வாழத் தொடங்கிய காலத்தில் (பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பழமையானது) இன்று நாம் பயன்படுத்தும் இந்த காவிரி வடிநில பாசன கட்டமைப்பு திகழ்கிறது

நமது காவிரி வடிநில பாசன கட்டமைப்பானது நமக்கு இயற்கை தந்த பொக்கிஷம் ஆகும்.இது இயற்கையான வழியில் இயற்கையோடு இயைந்த பாசன கட்டமைப்பு ஆகும் இதில் 27 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறுகிறது பெரியதும் சிறியதுமாக 1,66,000 வாய்க்கால்கள் இந்த சமதள வடிநிலத்தில உள்ளது

இன்றளவும் தமிழகத்தில் உயிர்ப்புடன் விளங்குவதும் மேலும் மக்களுக்கு முழுமையாக பயன்படுவதுமான நதி காவிரி ஆகும்.தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு வேளாண்மைக்கு ஆதாரமாகவும்,30-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் நதி நமது காவிரி நதியாகும்

இன்று நம்மிடம் உள்ள நீரியல் கட்டமைப்புகளை நாம் தக்க விதத்தில் பாதுகாத்து பராமரித்து நமது எதிர்கால தலைமுறைக்கு வழங்கி செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது.இது குறித்து மேலும் திட்டமிடுவோம் கலந்தாய்வு கருத்தரங்கிற்கு வாருங்கள்..

சந்திப்போம் சிந்திப்போம்! ஒருங்கிணைந்து செயல்படுவோம் நண்பர்களே

சி.மகேந்திரன் 9444116087 அன்புச்செல்வன் 9042504453 சுரேஷ்குமார் 9443119111

Address

Sirkazhi
609110

Alerts

Be the first to know and let us send you an email when Sirkali TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sirkali TV:

Share