12/06/2026
காவேரி வடிநில பாசன கட்டமைப்பு மேலாண்மை குழு நடத்தும்
காவேரி கலந்தாய்வு கருத்தரங்கம் 2026
நாள்: 12-06-2026 வெள்ளிக்கிழமை
இடம்: பெசன்ட் லாட்ஜ்,பழைய பேருந்து நிலையம் எதிரில்,தஞ்சாவூர்
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
சிறப்பு விருத்தினார்கள்
தோழர் சி மகேந்திரன்
பேராசிரியர் பழனித்துரை
செந்தூர் பாரி,எஸ்னோரா இன்டர்நேஷனல்
ஆர்.விமல்நாதன்,சுவாமிமலை
நக்கீரன்,சூழலியலாளர்
டெல்டா சத்திய நாராயணன்
கார்த்திக் குணசேகரன்,அறம் தினை,சென்னை
சுரேஷ் குமார்,CAAAP,சிதம்பரம்
இன்று வரை புழக்கத்தில் உள்ள உலகின் தொன்மையான நீர் பாசன கட்டமைப்புகளில் முதன்மையானதும் சிறப்பு வாய்ந்ததும் நமது காவிரி வடிநிலத்தின் பாசன கட்டமைப்புகள் ஆகும்.இது மனிதன் வேளாண்மை சமூகமாக வாழத் தொடங்கிய காலத்தில் (பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பழமையானது) இன்று நாம் பயன்படுத்தும் இந்த காவிரி வடிநில பாசன கட்டமைப்பு திகழ்கிறது
நமது காவிரி வடிநில பாசன கட்டமைப்பானது நமக்கு இயற்கை தந்த பொக்கிஷம் ஆகும்.இது இயற்கையான வழியில் இயற்கையோடு இயைந்த பாசன கட்டமைப்பு ஆகும் இதில் 27 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறுகிறது பெரியதும் சிறியதுமாக 1,66,000 வாய்க்கால்கள் இந்த சமதள வடிநிலத்தில உள்ளது
இன்றளவும் தமிழகத்தில் உயிர்ப்புடன் விளங்குவதும் மேலும் மக்களுக்கு முழுமையாக பயன்படுவதுமான நதி காவிரி ஆகும்.தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு வேளாண்மைக்கு ஆதாரமாகவும்,30-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் நதி நமது காவிரி நதியாகும்
இன்று நம்மிடம் உள்ள நீரியல் கட்டமைப்புகளை நாம் தக்க விதத்தில் பாதுகாத்து பராமரித்து நமது எதிர்கால தலைமுறைக்கு வழங்கி செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது.இது குறித்து மேலும் திட்டமிடுவோம் கலந்தாய்வு கருத்தரங்கிற்கு வாருங்கள்..
சந்திப்போம் சிந்திப்போம்! ஒருங்கிணைந்து செயல்படுவோம் நண்பர்களே
சி.மகேந்திரன் 9444116087 அன்புச்செல்வன் 9042504453 சுரேஷ்குமார் 9443119111