20/04/2026
#இஞ்சி_பயிர்ச்செய்கை_முறைLF
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿
பழங்காலத்தில் உலகளவில் பழக்கத்தில் இருந்த பாரம்பரிய மருத்துவ முறையில் 60% மருந்துகள் இஞ்சியையே மூலப்பொருளாக கொண்டிருந்ததாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நல்ல வடிகால் வசதியுள்ள மணல், களிமண் கலந்த குறுமண், சிவப்பு குறுமண் நிலங்களில் நன்கு வளரும்.
மே – ஜூன் மாதங்கள் பயிரிடுவதற்கு ஏற்றவை.
இஞ்சி கிளங்குகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நடுகை செய்யப்படுகிறது.
ஒரு ஏக்கருக்கு 700 கிலோ இஞ்சி கிழங்குகள் தேவைப்படும்.
இஞ்சி நடுகை செய்ய பிப்ரவரி-மார்ச் மாதம் கோடைக்கால மழை கிடைத்தவுடன் நிலத்தை 3 முறை நன்றாக உழுது தயார் செய்ய வேண்டும்.
அதன்பின் 15 செ.மீ உயரம், 1 மீட்டர் அகலத்தில் மற்றும் தேவையான நீளம் வைத்து பாத்திகள் அமைக்க வேண்டும் பாத்திகளுக்கிடையே 45 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும்.
கோடைமழை கிடைத்தவுடனே இஞ்சி நடவு செய்ய வேண்டும். 15-20 கிராம் எடை மற்றும் 2 - 4 செ.மீ நீளம் உள்ள கிழங்கு துண்டுகளை பாத்திகளில்
30 x 30 செ.மீ இடைவெளியில் சிறு குழிகளில் நடுதல் வேண்டும்.
நன்கு சிதைந்த மாட்டு சாணி அல்லது மக்கிய உரம் ஒரு ஏக்கருக்கு 2 டன் என்ற அளவில் குழிகளில் கிழங்குகளை நடும் போது இட வேண்டும்.
திடகாத்திரமான ஒரு மொட்டாவது மேல்நோக்கி இருக்குமாறு பார்த்து நடவேண்டும்.
நட்டவுடன் உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மண்ணின் ஈர தன்மைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும். மேலுரம் இடும்போது மண் அணைத்து நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நட்டு 2 மாதத்தில் களை அதிகமாக இருந்தால் களை எடுக்க வேண்டும்.
மற்றும் 4வது, 5வது மாதங்களில் மீண்டும் களை எடுக்க வேண்டும். நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சி காய்கறிக்காக பயன்படுத்துவதாக இருந்தால் ஆறு மாதத்தில் அறுவடை செய்ய வேண்டும்.
விதைப் பயன் பாட்டிற்கும். சுக்கு (உலர்ந்த இஞ்சி) தயாரிக்க பொதுவாக 8 மாதத்தில் (இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்போது) அறுவடை செய்ய வேண்டும்.
விதைப் பயன்பாட்டிற்காக அறுவடை செய்தவுடனேயே, நோயுற்ற விதைக் கிழங்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும். விதைக்கிழங்குகளை குழிகளில் வைத்து வெயில், மழை படாதவாறு பாதுகாக்க வேண்டும்.
அதிக லாபம் தரும் பயிர்களில் இஞ்சியும் ஒன்று என்பதில் எந்தவொரு ஐயப்பாடும் இல்லை.
ஒரு ஏக்கருக்கு 8 -10 டன்கள் இஞ்சி கிழங்குகள் கிடைக்கும்.
இலங்கை ரூபாயில் 20 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.
இஞ்சிக்கிழங்கை பொறுத்தவரை சந்தை வாய்ப்பு மிக மிக அதிகம் ஆகையால் தயங்காமல் நடவு செய்யலாம்.
அதோடு விரைவில் பழுதாகாது சந்தைப்படுத்தலின் போது பல நாட்கள் வைத்திருக்க முடியும்.
மேலும். உங்களுக்கு தேவையான வேறு கட்டுரையின் தலைப்பினை அல்லது உங்கள் அபிப்பிராயத்தை இப்பதிவில் கமெண்டில் பதிவிடுங்கள்
அதற்கேற்றாற்போல் கட்டுரைகளை நாங்களும் பதிவிடுவோம்
மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784
WhatsApp:0769196445
Laxci Farm
077 023 9784
https://maps.app.goo.gl/WDx5Kivndezb6WAj8
நன்றி...
Laxci Farm.